Tuesday, December 17, 2019

குறள்களுக்குப் பலபொருள்!

இப்பக்கம்  கேட்டேன்  ஒருபொருளைச் சொன்னார்கள்!
அப்பக்கம் கேட்டேன் ஒருபொருளைச் சொன்னார்கள்!
எப்பக்கம் கேட்டாலும் ஏதோ ஒருபொருளை
எப்படியோ சொல்கின்றார்! ஒத்த பொருளுரைக்க
எப்பக்கம் சென்றாலும்  சொல்வதற்கே ஆளில்லை!
இப்படி வேறுபட்டுச் சொல்வதற்கா வள்ளுவம்?
இப்படிக் கூறுபோட்டுப் பார்ப்பதற்கா வள்ளுவம்?
எப்படியோ அய்யன் எழுதிவைத்துச் சென்றுவிட்டார்!
இப்படியும் அப்படியும் வாட்டி வதைப்பதேன்?
ஒத்த பொருளொன்றைக் கூறு.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home