Friday, February 14, 2020

எடுப்பார் கைப்பிள்ளை!

எடுப்பார்கைப் பிள்ளையாக வாழ நினைத்தால்
எடுத்ததற் கெல்லாம் அடுத்தவரைக் கேட்போம்!
அடுத்தவர் சொல்வதே வேதவாக் காகும்!
தடுமாற்றம் வாழ்வாகும்! சிந்தனைக் கூட்டில்
அடுத்தவர் ஆதிக்கம் கூடும்! அறிவை
அடகுவைத்து வாழ்வோம் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home