Thursday, June 25, 2020

முத்தொள்ளாயிரம் பாடல் 34

“புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண்நிற்பன்
கலவி களிமயங்கிக் காணேன்;---நிலவியசீர்
மண்ணாளுஞ் செங்கோல் வளவனை  யானிதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு”

வந்தார்! அணைத்தேனா? இல்லை திரும்பிநின்றேன்!
பொங்கிய ஊடலால் நின்றேன் முதுகுகாட்டி!
என்னை அணைத்தபோது அந்தமுகம் பார்த்தேனா?
என்புலன்கள் அய்யோ! மயங்கின பார்க்கவில்லை!
என்னவனைக் கண்ட அழகிதுதான் பாருங்கள்!
எங்கே அவனைத்தான் காணவில்லை?
வந்ததெல்லாம்
கண்ட கனவிலா? சே.

மதுரை பாபாராஜ்


ஹைக்கூ
திரும்பி ஊடல்கொண்டேன்;அணைத்தார் தலைகுனிந்தேன்;
விரும்பிய கூடலில் விழியிழந்தேன்; வளவன்
திருமுகத்தை நான் கண்ட அழகடியோ தோழி!

கே ஜி ராஜேந்திரபாபு



0 Comments:

Post a Comment

<< Home