Sunday, June 21, 2020



குறள் 448
குடித்துவிட்டுச் செல்வான் குடிசைக்குள் சண்டை!
அடிதடி ஓசை குழந்தை அலறும்!
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடுமென்றார் அய்யன்!
இடித்துரைத்தாள் இல்லாள் கணவனை நோக்கி
அடிவாங்கி நின்றாள் அழுது.
மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home