Wednesday, June 17, 2020


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

குறள் 490:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

எண்ணற்ற மீன்கள் கடலிலே வந்தாலும்
உன்னிரையைக் காண பொறுமையுடன் நின்றேதான்
உன்னிரையைக் கண்டவுடன் பாய்ந்தே பிடிக்கின்றாய்!
காலம் வரும்வரைக் காத்திருந்து வாய்ப்புவரும்
நேரத்தில் வாழ்வில் செயல்பட்டால் வெற்றிதான்!
கோலங்கள் மாறும் பொறு.
மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home