Wednesday, March 03, 2021

முத்தொள்ளாயிரம் 15

 முத்தொள்ளாயிரம்

பாடல்.15

களிகள் களிகட்கு நீட்டத்தங் கையாற்

களிகள் விதிர்த்திட்ட வெங்கட் – துளிகலந்து

ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே

பூம்புனல் வஞ்சி அகம். – 15


கள்ளருந்தி நாளும் களிமக்கள் வாழ்கின்ற

வஞ்சி நகரோ தலைநகராம் சேரனுக்கு!

கள்ளுண்ணும் மக்களுக்கு மொந்தையில் நீட்டுவார்! 

சிந்துகின்ற கள்துளிகள் சாலையில் ஓடுமாம்!

அந்தத் துளிகளில் யானைசென்று சேறாகும்!

கள்வளம் மிக்கது சேரநாடு! மக்களோ

கள்ளின்பம் கொள்வார் களித்து.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home