Sunday, January 09, 2022

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


வணக்கம்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


பறவைகளே! இன்றைய கவிதை!


இதுதான் திரைப்படம் 

அன்றிருந்து இன்றுவரை!


வானில் பறந்துசென்று கீழே விழுந்திடுவார்!

காயம் சிறிதுமின்றி ஓடிவந்து தாக்குவார்!

பாய்ந்து ஒருவரே பத்துபேரைத் தாக்குவார்!

காணக்கண் கோடிவேண்டும் இங்கு.


அருவாளும் கம்புகளும் பந்தாடிப் பார்க்கும்!

தெறித்து விழுவார் பொருள்களின் மீது!

உடனே எழுந்துவந்து சண்டைபோடும் ஆற்றல்

நடைமுறையில் உண்டா உரை?


சிறுகல் தடுக்கி விழுந்தாலே ரத்தம்

பெருக்கெடுத்தே ஓட மருந்தகம் நோக்கி

விரைகின்ற கோலம் மனிதருக்கு! அங்கே

எரிமலைக்குள் சென்றாலும் காயமே இன்றி

வருகின்றார் மீண்டும் எழுந்து.


எல்லா மொழிப்படமும் இப்படித்தான் காட்டுகின்றார்!

நம்பும் படியாக காட்டினால் நல்லதுதான்!

இல்லையென்றால் நாட்டிலே மக்கள் நகைத்திருப்பார்!

எள்ளிநகை யாடுவார் சொல்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home