Saturday, July 23, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!



கவலைப் படுவதை நாமிங்கே நாளும்

நியாயப் படுத்துகின்றோம்! காரணங்கள் கூறி

அலைகின்றோம்! திட்டமிடும் போது இயன்ற

வகையில் அனைத்துவிதத் தீர்வை முயல்வோம்!

கவலைப் படுவதோ கூடுத லான

உளைச்சலின் தாக்கத்தை நம்செயலில் ஏற்றும்!

உளைச்சல் தவிர்த்தே உழை.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home