Saturday, August 19, 2023

பெற்றோர் காரணம்


பெற்றோர் காரணம்!


பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல உறுதுணையாய்

இல்லத்தில் பெற்றோர் இருக்கவேண்டும்! அன்பாக

இன்சொற்கள் பேசி அனுப்பவேண்டும்! நாள்தோறும்

இல்லத்தின் சூழல் இனிமையாய் மாறிவிட்டால்

பிள்ளைகள் உள்ளம் மகிழ்வார்! சிரித்திருப்பார்!

எல்லாமே பெற்றோர்தான் சொல்


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home