Monday, October 16, 2023

மருத்துவர் சேது


மருத்துவர் சேது அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


அன்பாக நேசிக்க மக்கள் உருவானார்!

நன்கு பயன்படுத்த இங்கே பொருள்களை

உண்டாக்கி னார்கள்! உலகம் குழப்பத்தில் 

உள்ளதன் காரணம் என்ன? பொருள்களை

எல்லோரும் நேசிக்கின் றோம்நாம்தான்! மக்களை

எல்லோரும் இங்கே பயன்படுத்திப் பார்க்கிறோம்!

எல்லாமே நம்மால்தான் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home