Wednesday, February 19, 2025

சினம்

 சினம்!

சினத்தின் சிகரத்தில் ஆளும் பதற்றம்

கணைபோல சொற்களோ தாறுமாறாய்ப் பாய

அணையுடைத்த வெள்ளம்போல் ஆணவத்தின் கூத்து

அரங்கேற மட்டு மரியாதை எல்லாம்

பறந்திருக்கும் அங்கே! வயதும் பொருட்டோ?

சிறகிழந்தே கைபிசைவார் கேட்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home