Thursday, March 26, 2026

சொல்வன்மை--65

 சொல்வன்மை--65

----------------------------------------------------------------

சுருங்கச் சொல்தல் தனித்திறமை!

----------------------------------------------------------------

நாநயம் ஒன்றே தனித்திறமை!

சாதனை படைக்கும் தனிச்சிறப்பு!


நன்மை, தீமை சொல்லால்தான்!

பேச்சில் தவறைத் தவிர்த்திடுவோம்!


கேட்டோர் தம்மை வசப்படுத்திக்

கேட்கா தோரை ஏங்கவைக்கும்


சொல்லாற் றலுக்கோ நிகரில்லை!

சொல்லின் வன்மை அறம்பொருளாம்!


சொற்பொருள் அறிந்து பேசுங்கள்!

சொல்லும் சொல்லை மற்றவர்கள்

வெல்லாத வாறு பயன்படுத்து!


கேட்பவர்க் கேற்ப பேசவேண்டும்!

மற்றவர் பேச்சின் பொருளறிந்து

ஏற்கும் பக்குவம் பண்பாகும்!


சொல்லில் தெளிவு, சோர்வின்மை

துணிவும் கொண்ட மனிதனையோ

உலகில் வெல்வது கடினந்தான்!


நேர்த்தியாய் செய்தியை கோத்தேதான்

இனிதே பேசும் நாவரசன்

சொற்படி கேட்கும் இவ்வுலகம்!


சுருங்கச் சொல்லத் தெரியாதோர்

நீண்ட நேரம் பேசிடுவார்!

அதனால் எந்தப் பயனுமில்லை!

கேட்போ ருக்குப் புரியாமல்

பேசு பவர்கள் , மணமற்ற

கொத்து மலர்கள் போன்றவராம்!


0 Comments:

Post a Comment

<< Home