ஒற்றாடல் -- 59
திருக்குறள் குழந்தைப் பாடல்
---------------------------------------------------------
ஒற்றாடல் -- 59
----------------------------------------------------------------
உளவின் வலிமை அரசின் வலிமை!
----------------------------------------------------------------
ஒற்றர்கள், நீதிநூல்கள் இவையிரண்டைக் கண்ணிரண்டாய்
நேர்மையான ஆட்சியாளர் போற்றித்தான் காக்கவேண்டும்!
எல்லோர்க்கும் எங்கெங்கு என்னென்னே நடக்கிறது
என்றெல்லாம் ஒற்றர்கள் மூலமாக அறிவதைத்தான்
நல்லாட்சி புரிபவர்கள் கடமையாகச் செய்திடுவார்!
ஒற்றர்கள் மூலமாக நாட்டின் நடப்புகளை
உணராத ஆட்சியாளர் வெற்றிபெற வாய்ப்பில்லை!
வேண்டியவர் வேண்டாதார் பாகுபாடு இல்லாமல்
பகுத்தறிந்து சொல்பவரே நேர்மையான ஒற்றராவார்!
வேடமிட்டுச் சென்றாலும் சந்தேகம் தோன்றாமல்
சிக்கினாலும் அஞ்சாமல் சந்திப்போன் ஒற்றனாவான்!
புகமுடியா இடந்தன்னில் துறவியைப்போல் வேடமிட்டே
புகுந்தேதான் துன்பத்தை எதிர்கொண்டு தளராமல்
கடமையைச் செய்பவனே கலங்காத ஒற்றனாவான்!
ஒருவருக் கொருவர் அறியாமல் மூவரை
அனுப்பித் தரவழைக்கும் செய்தியுடன் ஒப்பிட்டே
மூவரது செய்திகளும் ஒத்திருந்தால் நம்பவேண்டும்!
பிறரிங்கே அறியாத வண்னம் ஒற்றருக்குச்
சிறப்புகள் செய்யவேண்டும்! இல்லையென்றால் இரகசியத்தை
வெளிப்படுத்திச் சொல்லிய நிலைபோல் ஆகிவிடும்!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home