Wednesday, March 25, 2026

தெரிந்து வினையாடல்--52

 திருக்குறள் குழந்தைப் பாடல்

-------------------------------------------------------------

தெரிந்து வினையாடல்--52

-------------------------------------------------------------

நன்மையைத் தீமையை நன்றாக ஆராய்ந்து

நன்மையை நாடுவோரை செயல்வீரர் எனச்சொல்வார்!


பொருள்வரவைப் பெருக்கித்தான் அதன்வளத்தை உயர்த்தித்தான்

துன்பத்தை நீக்குவோனை செயல்புரியத் தேர்ந்தெடுப்பார்!


அன்புடன் அறிவாற்றல் தெளிவுடன் ஆசையின்றி

வாழ்கின்ற பண்புகளைக் கொண்டவனை நம்புங்கள்!


எப்படித் தானிங்கே தேர்ந்தெடுத்த போதிலுமே

செயல்திறனால் வேறுபடும் மாந்தர்கள் பலருண்டு!


செயல்படும் ஆற்றலுள்ள மாந்தரை விட்டுவிட்டு

மற்றவரைச் செயல்புரிய ஏவுதலைத் தவிர்க்கவேண்டும்!


செயல்புரிவோர் செயல்தன்மை ஆராய்ந்து தெளிந்தேதான்

செயல்செய்யும் காலத்தைப் பொருத்தித்தான் செய்யவேண்டும்!


இச்செயலை இவனிங்கே முடித்திடுவான் என்றாய்ந்து

அச்செயலை அவனிடமே ஒப்படைத்தல் அறிவுடைமை!


செயலுக்குத் தகுதியுள்ளோன் என்றறிந்த பிறகிங்கே

அதைச்செய்ய அப்பொறுப்பை ஒப்படைத்தல் விவேகந்தான்!


கடமையே மூச்சாக வாழ்பவனைத் தவறாக

நினைப்போரை விட்டுத்தான் செல்வங்கள் நீங்கிவிடும்!

உழைப்பவர்கள் மகிழ்ந்திருந்தால் நாடெல்லாம் வளம்பெருகும்!

அவர்களது நலங்காக்க அக்கறையை ஏற்கவேண்டும்!


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home