மடி இன்மை---61
மடி இன்மை---61
------------------------------------------------------------
சோம்பலின்றி வாழ்ந்தால் குடும்பமே முன்னேறும்
----------------------------------------------------------------
சோம்பல் என்பது மாசாகும்
குடும்ப விளக்கை அணைத்துவிடும்!
சோம்பித் திரிவதை விட்டுவிட்டு
முயன்றால் குடும்பம் வளமாகும்!
சோம்பல் தன்மைக் கொண்டவனின்
கண்முன் குடும்பம் அழிந்துவிடும்!
சோம்பல் பெருக்கும் குற்றத்தால்
குடும்பப் பெருமை சீரழியும்!
சோம்பல், மறதி, தூக்கமுடன்
காலம் தாழ்த்தல் இவைநான்கும்
கெடுவார் ஏறும் மரக்கலங்கள்!
செல்வச் சீமான் நட்பெனினும்
சோம்பல் உடையோர் பயனடையார்!
மந்தமதி கொண்ட சோம்பேறி
இகழப் பட்டே தலைகுனிவார்!
சோம்பல் நீக்கி உழைப்பவனால்
குடும்பச் சிறுமை நீங்கிவிடும்!
சோம்பல் இன்றி ஆள்பவனே
உலகைச் சிறப்பாய் ஆள்பவனாம்!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home