Thursday, March 26, 2026

வினைத்திட்பம்--67

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

வினைத்திட்பம்--67

----------------------------------------------------------------

செயலில் உறுதி--மனதில் துணிவு!

----------------------------------------------------------------

செயலின் வலிமை மனவலிமை

மற்றவை இதற்கு நிகரில்லை!


தடையத் தடுக்க முனைதலும்

வந்தால் கலக்கம் இல்லாமல் 

சந்திப் பதுமே வினைத்திட்பம்!


செயலின் இரகசியம் காக்காமல்

இடையில் தெரிந்தால் துன்பந்தான்!

சொல்தல் யார்க்கும் எளிதாகும்


செய்து காட்டல் அரிதாகும்!

செயல்திறன் ஆற்றல் அளவாகும்!

சான்றோர் அவரைப் போற்றிடுவார்!


மனதில் உறுதி படைத்திருந்தால்

செயலை முடிப்பார் நினைத்தபடி!


தேரை இயக்கும் அச்சாணி

உருவில் என்றும் சிறியதுதான்!

உருவைக் கண்டு இகழாதே

செயலின் திறமையால் எடைபோடு!


காலந் தன்னைத் தாழ்த்தாமல்

மனதில் கலக்கம் இல்லாமல்

தளரா முயற்சி யோடிங்கே

செயலைச் செய்து முடிக்கவேண்டும்!


இன்னலின் பயனோ இனிமைதான்

துணிவுடன் செயலைச் செய்யுங்கள்!


மலைபோல் ஆற்றல் இருந்தாலும்

தொழிலில் உறுதி இல்லையெனில்

உயர்ந்தோர் போற்ற மாட்டார்கள்!


0 Comments:

Post a Comment

<< Home