Thursday, March 26, 2026

வினை செயல்வகை--68

 திருக்குறள் குழந்தைப் பாடல்

---------------------------------------------------------------

வினை செயல்வகை--68

----------------------------------------------------------------

செயலின் ஆற்றலே வெற்றியின் ஊற்றாகும்

----------------------------------------------------------------

செயலை முடிக்கத் துணிந்தபின்பும்

காலந் தாழ்த்தல் குற்றந்தான்!


காலந் தாழ்த்தி முடிக்கின்ற

செயலை மெதுவாய் முடித்திடலாம்!


உடனடி யாக முடிப்பதையோ

உடனே முடித்தால் பயன்தருமே!


முடியும் வரைக்கும் செயலாற்று!

முடியாத போது முடிப்பதற்கு

உத்திகள் எண்ணிச் செய்துவிடு!


இடையில் விட்ட செயலெனினும்

தீர்வைக் காணா பகையெனினும்

முழுதும் அணைக்கா நெருப்பைப்போல்

என்றும் துன்பம் விளைவிக்கும்!


செயலும் உரிய பொருள்களையும்

காலம் கருவி இடங்களையும்

ஆய்ந்தே செயலில் ஈடுபட்டால்

பறிப்போம் வெற்றிக் கனிகளைத்தான்!


எந்தச் செயலை எடுத்தாலும்

அந்தச் செயலில் அனுபவத்தைக்

கொண்டோர் கருத்தைக் கேட்டுக்கொள்!


ஒருசெயல் செய்யும் நிலைதன்னில்

மற்றொரு செயலைச் செய்வதுவோ

யானையை வைத்து இன்னுமொரு

யானையைப் பிடிப்பது போலாகும்!


வலிமையில் விஞ்சும் வன்பகையை

நட்பாய் மாற்றுதல் விவேகந்தான்

0 Comments:

Post a Comment

<< Home