Sunday, March 29, 2026

சூரரைப் போற்று

 பாரதியின் புதிய ஆத்திசூடி..


30  சூரரைப் போற்று

விளக்கம் 

சூரியனைப் போற்று.

----------------------------------+----------------------

பகலவனின் வன்கதிரை ஓசோன் படலம்

கடமையாய் நாளும் வடிகட்டி பாரை

இதமாகக் காப்பதற்குத் தோள்கொடு! மாசால்

கறைப்படுத்தி வாழ்ந்தால் மண்ணுலக வாழ்க்கை

முறைசிதைந்து போகும்! பகலவனைப்போற்ற

சிறைவைக்கும் மாசைத்  தவிர்.


0 Comments:

Post a Comment

<< Home