Friday, March 27, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 6

 குழந்தைகளுக்கு குறளமுதம் 6

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.


அம்மா அப்பா வாங்க

குறளைச் சொல்லித் தாங்க


அக்கா தம்பி நாங்க

ஆர்வத் தோடு வந்தோம்


சொல்லித் தந்தால் மகிழ்வோம்

சொன்னால் பொருளை அறிவோம்


நம்மிடம் உள்ள ஐம்புலனைக்

கட்டுப் படுத்தி வாழ்கின்ற


தூயோன் போற்றும் நெறிகளையே

ஒழுக்கத் துடனே பின்பற்றும்


நல்லோர் ஈட்டும் நற்புகழால்

ஒளிரும் வாழ்வே நிலையாகும்


புலன டக்கம் இல்லாதோர்

உயர்ந்தோர் எனினும் கீழோரே!


நாமும் புலன்களை அடக்கித்தான்

நிமிர்ந்தே வாழ்வோம் உலகத்தில்



0 Comments:

Post a Comment

<< Home