இடுக்கண் அழியாமை--63
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
இடுக்கண் அழியாமை--63
----------------------------------------------------------------
துன்பத்தில் துவளாதே! இன்பத்தில் துள்ளாதே!
----------------------------------------------------------------
துன்பம் வந்தால் சிரித்துவிடு!
தன்னால் துன்பம் மறைந்துவிடும்!
திரண்டு உறுமும் வெள்ளம்போல்
துன்பம் வந்தால் சந்திக்கும்
நிலையை எடுத்தால் வடிந்துவிடும்!
துன்பத்தின் தோளிலே துன்பத்தைச்
சுமத்தித் துடிக்க வைத்துவிட்டல்
வெற்றிக் கனிகள் பறித்திடலாம்!
வண்டிச் சுமையை முனைப்புடனே
இழுக்கும் எருதைப் போலத்தான்
மனந்தள ராமல் உழைத்திட்டால்
துன்பம் இங்கே துன்புறுமே!
தொடர்ந்து துன்பம் வந்தாலும்
கலக்கம் இன்றிச் சந்திதால்
துன்பம் விலகி மறைந்துவிடும்!
இருந்த வளத்தைக் காக்காமல்
இழந்த போது வாடுவதோ?
உடலை வருத்தும் துன்பத்தை
சான்றோர் எண்ணிக் கலங்கமாட்டார்!
இன்பம் கண்டு துள்ளாதோன்
துன்பம் கண்டு துவள்வதில்லை!
துன்பந் தன்னை இன்பமாக
எண்ணி வாழும் மாந்தரோ
பகைவரும் விரும்பும் சிறப்படைவார்!
0 Comments:
Post a Comment
<< Home