Thursday, April 05, 2007

நம்பிக்கையோடு நடைபோடு

வாழ்க்கை என்பது களிமண்தான் --அதில்
வடிவம் காண்பது உன்மனந்தான்!

சூழ்நிலை சுற்றி வளைத்தாலும்
தூண்டில் போட்டே இழுத்தாலும்
கோழை யாக மாறாதே !
கூச்சல் போட்டே ஓடாதே!

மலையைப் போல நின்றிடுவாய்!
மலைப்பைத் தூக்கி எறிந்திடுவாய்!
நிலையைப் புரிந்தே செயல்படுவாய்!
நேர்மையாய் நின்றே வென்றிடுவாய்!

எத்தனைக் கதவும் மூடட்டும்!
இன்னொரு கதவு திறந்துவிடும்!
முற்றிலும் நிலைகள் மாறிவிடும்!
முன்னேற் றங்கள் ஊறிவரும்!

நம்பிக்கை யோடு நடைபோடு!
நாலையும் நன்றாய் எடைபோடு!
நாணயம் ஒழுக்கத்தை மூச்சாக்கு!
நாளும் வெற்றியை வீச்சாக்கு!

0 Comments:

Post a Comment

<< Home