Thursday, April 05, 2007

திருக்குறளே ஆணிவேர்

அறத்துப்பால் நன்னெறியை அன்றாடம் வாழ்வில்
மறக்காமல் பின்பற்றி வாழ்ந்தால் -- சிறப்பான
பண்பை விளக்கும் பொருட்பால் பொங்கிவர
இன்பம் நிலைக்கும் இயம்பு.

உலகப் பொதுமறையாய் உள்ளம் குறளை
நிலையாக ஏற்கும் நிலைதான் -- உலகில்
அனைத்துமத நல்லிணக்கம் ஆணிவேராய் ஊன்ற
வினைமுடுக்கும் என்றே விளம்பு.

0 Comments:

Post a Comment

<< Home