Friday, January 18, 2008

வாழ்வில் பெயரன்கள்!

(சுசாந் சிரிராம்-நிக்கில் அபிசேக்)

இரண்டு பெயரன்கள் என்னிரண்டு கண்கள்!
சுரக்கின்ற இன்பத்தில் துள்ளி-அரவணைத்தே
அன்பைப் பொழிந்து விளையாடி நேரத்தை
நன்றாய்க் கழிக்கின்றேன் நான்.

ஓடுகின்றார்!ஓடி விழுகின்றார்! வம்பிழுத்துப்
பாடுகின்றார்!தாத்தாவை ஓடவைத்து-ஊடுகின்றார்!
பாட்டியிங்கே ஊட்டிவிடப் பண்பில் வளர்கின்றார்!
லூட்டி அடிக்கின்றார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home