Friday, September 26, 2008

பூமரமும் தனிமரமும்

பூமரம்

காரிகையின் அன்புக் கணவர் இறந்துவிட்டால்
பூவிழப்பாள்! பொட்டிழப்பாள்!வாழ்விருக்கும் --ஆவலுடன்
சுற்றங்கள் பிள்ளைகள் சீராகப் பூமரத்தைச்
சுற்றுவது போல்வருவார் சூழ்ந்து .

தனிமரம்

காரிகையை இங்கே கணவன் இழந்துவிட்டால்
வேரிழந்த பட்டமரம் போலாவான் -- பாரிலே
வாழ்விழந்தே தத்தளிப்பான் சுற்றத்தார் பிள்ளைகள்
சூழ்ந்தும் தனிமரந்தான்! செப்பு.

1 Comments:

Blogger Deepa said...

ஹ்ம்ம்.. கசப்பான உண்மை
இன்னுமா...

கவிதயில் கூட இப்படி ஒரு எண்ணம் வேண்டாமே!!

கவிஞ்னின் சிந்தனைக்கு சித்தர்களின் சக்தி உண்டு என எங்கோ படித்தது நிழலாய் நினைவுக்கு வருகிரது.
கவிதயில் கூட இப்படி ஒரு எண்ணம் வேண்டாமே!!

6:11 AM

 

Post a Comment

<< Home