Tuesday, November 04, 2008

சிறுகதையும் தொடர்கதையும்

பிறப்போம்! வளர்வோம்!தனியாய், துணையாய்
கடமை வடத்தைப் பிடித்தே--தடத்திலே
தேரைச் செலுத்தி நிலையில் நிறுத்திட
ஊர்வதே வாழ்க்கை!உணர்.

தேருலா செல்லத் தடைகளோ ஏராளம்!
நேர்வழி சென்றால் தடுமாறும்--பாரில்
குறுக்குவழி என்றால் தடம்புரளும்!நாளும்
நடுவழி காணல் அரிது.

இப்படியோ அப்படியோ எப்படியோ இவ்வுலகில்
அப்படியே தேரை நிலையில் நிறுத்தினாலும்
கொப்பொடிந்த மாமரம்போல் அச்சொடிந்தே வீழ்ந்துவிடும்!
இப்படித்தான் வாழ்வின் முடிவு.

சிறுகதைகள் சேர்ந்த தொடர்கதைதான் வாழ்க்கை!
விறுவிறுப்பும் மந்தமும் மாறிமாறி வந்து
தொடர்கதை மூட சிறுகதை இங்கே
தொடர்கதை ஆகும் ! விளம்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home