Tuesday, October 28, 2008

இந்திய -- இலங்கை கூட்டறிக்கை! ! ஓ!

=====================================================
போரை நிறுத்திவிட்டு கூட்டறிக்கை விட்டிருந்தால்
ஈரமனம் என்றேதான் சொல்லலாம் -- போரும்
தொடருமாம்! ஈழத் தமிழர்கள் வாழ
தொடருமாம் நற்பணிகள்! ஓ! .

வீடிழந்து வாழ்க்கையின் வேரோடும் ஆதாரக்
கோடிழந்து தத்தளித்து நாள்தோறும் --ஓடி
மறைந்தேதான் வாழ்கின்றார் ஏக்கத் தோடு !
மறையுமா வேதனை? சொல்.

பங்கெடுக்க மாட்டாரம் உள்நாட்டுச் சிக்கலில் !
வங்கதேசச் சிக்கலோ இந்தியாவின் அங்கமோ?
தங்களுக்கு நீதிஒன்று! மற்றவர்க்கு நீதிஒன்று!
இங்குமக்கள் கேட்கின்றார்! சொல்.

இந்தத் தருணத்தை ஏற்றே நிரந்தரமாய்
அந்தோ! இலங்கையில் தீர்வுகாண-- இந்தியா
வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்! இதயத்தில்
காய்தல் உவத்தலின்றி தான்.

0 Comments:

Post a Comment

<< Home