Friday, October 24, 2008

நாட்டில் பாலம் -- ஏட்டில் பாலம்

பாலம் இதழுக்கு வாழ்த்து)

போக்கு வரத்து நெரிசலைத் தீர்ப்பதற்கு
காக்கும் கரங்களாக பாலங்கள் -- ஆக்கபூர்வ
சிந்தனையின் வேர்களாக அங்கங்கே ஊன்றிநிற்கும்
தன்மையினைக் காண்கின்றோம் சாற்று.

ஆறுகளை நாம்கடக்க பாலங்கள் உள்ளன!
வேறுவேறாய் ஊர்களோ எந்தத் தொடர்புமின்றி
கூறுபோட்டு உள்ளதை வாகாய் இணைப்பதற்கு
ஈடுகட்டும் பாலங்கள் தாம்.

நாடுகள் ஒவ்வொன்றும் நல்லுறவை மேம்படுத்த
கூடுகட்டும் பண்பின் உவமைக்கோ -- பாடுபொருள்
ஆகநிற்கும் பாலங்கள்! இவ்வுலக வாழ்வியலின்
பாகமாக ஆனதென்றே பாடு.

கட்டுரைகள், சிந்தனையைத் தூண்டும் கவிதைகள்
இப்படி ஏந்திவந்தே இங்கேயோ -- நற்றமிழின்
சுற்றத்தை நாளும் இணைக்கும் பொதுநலத்தின்
அற்புதமே "பாலம் " இதழ்.

0 Comments:

Post a Comment

<< Home