Sunday, October 19, 2008

இந்தியன் என்றே சொல்லு!

மனிதநேயக் கோயில் கட்டு!
மதவெறியை மூட்டை கட்டு!

அனைவரையும் ஒன்றாய்க் கூட்டு!
அமைதியென்னும் கொடியை நாட்டு!

இமயம்போல் நிமிர்ந்து நில்லு!
இந்தியன் நான் என்றே சொல்லு!

உமியாகப் பகையை ஊது!
உயர்ந்திடும் நமது நாடு!

0 Comments:

Post a Comment

<< Home