Tuesday, October 21, 2008

ஓடி விளையாடு தாத்தா

ஓடி விளையாடு தாத்தா -- நீ
ஓய்ந்திருக்க லாகாது தாத்தா

காலையிலே பேரனைத்தான் பள்ளிக்கு
கவனமாக அனுப்பவேண்டும் தாத்தா
மாலையிலே பள்ளிவிடும் நேரத்திலே
மலைக்காமல் அழைக்கவேண்டும் தாத்தா

வம்புசேட்டை சண்டித்தனம் பண்ணுவாங்க
மனதார பொறுத்துக்கணும் தாத்தா
அடிகூட கொடுப்பாங்க குழந்தைகள்
அத்தனையும் பொறுத்துக்கணும தாத்தா

ஓவியத்தைக் கத்துக்க கூடப்போகணும்
டியுசனுக்கு போவாங்க அங்கநிக்கணும்
தாவித்தாவி கராத்தேக்கு போனாலும்
தத்தித்தத்தி தாத்தாதான் கூடப்போகணும்

கண்ணயர்ந்து படுத்தாக்க போதுமய்யா
கதைகேட்டு வந்துவந்து சிணுங்குவாங்க
எத்தனையோ தாத்தாக்கள் இப்படித்தான்!
இன்பமான குழந்தைகளும் இப்படித்தான்!

0 Comments:

Post a Comment

<< Home