Sunday, October 19, 2008

மகளிர் மசோதா!

நாடாளு மன்றத்தில் நாளும் அரசியலார்
பாடாய்ப் படுத்துகின்றார் பண்பற்றோர் -- நாடே!
மகளிர் மசோதாவை மாண்புடனே ஏற்க
முகஞ்சுளித்து நிற்கின்றார்! ஏன்?

மேடை முழக்கத்தின் வேடம் கலைகிறது!
நாடே நகைக்கிறது! தன்னலத்தின் -- கூடுகளாய்
மாறி திசைமாறிச் செல்லும் அரசியலைச்
சாடிச் சலிக்கின்றார்! சாற்று.

கொள்கை அளவிலே கூற்றை ஏற்போம் !
கொள்கை நடைமுறையில் கூடுகட்ட -- எள்ளளவும்
ஏற்கமாட்டோம் என்றால் இடிமுழக்க பாரதியே !
பாட்டாலே பந்தாட வா.

0 Comments:

Post a Comment

<< Home