Saturday, November 22, 2008

ஏமாற்றம்

மீன்கொத்திப் பறவைகள் இரண்டைக் கண்டேன்!
மீன்பிடிக்கக் கடல்மீது போட்டிப் போட்டு
நான்முந்தி நீமுந்தி என்ற வாறு
நாவிற்குச் சுவைசேர்க்கப் பறந்த போது
மீனொன்று துள்ளியதும் பின்னால் வந்த
மீன்கொத்தி தான்கொத்திச் சென்ற தாலே
மீன்ஒன்றைத் தவறவிட்டு முன்னால் வந்த
மீன்கொத்தி ஏமாந்து சென்றதம்மா !

என்னவளின் கரம்பற்ற முயலும் போது
எங்கிருந்தோ வந்தவனோ அவள்கரத்தைத்
தன்கரத்தில் இணைத்துநின்று என்னை நோக்கித்
தமிழ்வாழ்த்துக் கூறவேண்டும் என்றுரைத்தான்!
முன்வந்தும் ஏமாந்த பறவை போல
முயன்றிருந்தும் சூழ்நிலையின் கைதி யாகி
நின்றிருந்த நிலையெண்ணி மனதை மாற்றி
நெடும்பயணம் தொடர்ந்திருந்தேன் வேறு திக்கில்!

=== மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home