Sunday, November 23, 2008

என்செல்லம் இவள்தான்!

வேலென விழிகள் சொல்ல
வில்எனப் புருவம் சொல்ல
பாலெனப் பருவம் சொல்ல
பொய்யென இடையோ சொல்ல
நூலென உருவம் சொல்ல
நற்சுவை இதழ்கள் சொல்ல
பூவெனப் பெண்மை சொல்ல
பொலிவுடன் நின்றாள் பாவை!

அலையென நடையோ சொல்ல
அருவியை வளையல் சொல்ல
கலையென சிரிப்போ சொல்ல
காரெனக் கூந்தல் சொல்ல
மலைத்திடச் செய்யும் வண்ணம்
மனதினில் புகுந்து கொண்டு
நிலைத்தவள் பெயரைக் கேட்டால்
நிறைவுடன் கவிதை என்பேன்!

-- மதுரை பாபாராஜ்
1985

0 Comments:

Post a Comment

<< Home