Friday, December 26, 2008

எல்லைக்கோடு சாம்பல்மேடு

எல்லைக்கோடு சாம்பல்மேடு 

 நாட்டுக்கு நாடிங்கே எல்லையில் கோடு! அதனால்தான் உலகத்தில் சாம்பல் மேடு! உலகத்தின் பரப்பளவைப் பொதுவாய் மாற்று! 
எனக்கென்ற தன்னலத்தை என்றும் தூற்று! இனம்வேறு! மொழிவேறு! நேயம் ஒன்று! இழிவான பேதங்கள் தீமைக் குன்று! அன்றாடச் சண்டைகள் அழிவைத் தூண்டும்! மண்ணகத்தில் வாழுமட்டும் மனஅமைதி வேண்டும்! 

 மதுரா பாபாராஜ் 2002

0 Comments:

Post a Comment

<< Home