Thursday, December 25, 2008

என்னடா வாழ்க்கை?

என்னடா வாழ்க்கை? 

 நானெடுத்த பிறவி இதுதானா? நாளெலாம் துன்பம் துணைதனா? தாயே! இதுதான் சரிதானா? தமிழே! இதுஉன் வரம்தானா ? 

 காட்டுக்குள் அலைவதுபோல் அலைகின்றேன்-- நான் கூட்டத்தில் தொலைந்ததுபோல் அழுகின்றேன்!

 வேட்டைக்குப் பலியாடாய் நிற்கின்றேன் -- வறுமைச் சாட்டைக்கு விருந்தாகித் துடிக்கின்றேன்! 

 பாலைக்குள் பயணத்தைத் தொடர்கின்றேன் -- சோர்ந்து ஆலையில் சக்கையென விழுகின்றேன்! 

 சோலையும் என்னை வெறுக்கிறதே -- தேன் மாலையும் எனக்குக் கசக்கிறதே!

 வாழ்வினில் நிம்மதி தேய்கிறது --என் வாசலில் விரக்தி பாய்கிறது! 

ஊழ்வினை என்பது இதுதானா ?-- இந்தத் தாழ்வுகள் எல்லாம் நிலைதானா? 

 மதுரை பாபாராஜ் 1997

0 Comments:

Post a Comment

<< Home