Thursday, December 25, 2008

மார்கழிமாதம்

குளித்தநீர் சொட்டச் சொட்டக்
கூந்தலைத் தொங்க விட்டுக்
களிப்புடன் மகளிர் கூட்டம்
காலையில் வீட்டின் முன்னே

வாசலில் நீர்தெ ளித்து
மனங்கவர் கோல மிட்டுப்
பூசணிப் பூவை வைத்துப்
பொலிவினை ரசித்துப் பார்ப்பார்!

மார்கழி மாதம் இங்கே
மலர்ந்ததை இவைகள் காட்டும்!
ஆர்வமாய்ப் பெண்கள் எல்லாம்
அனுதினம் கோயில் செல்வார்!

பாவையர் மாதம் என்றே
பாவைநோன் பேற்கும் உள்ளம் !
பூவையர் நல்ல வாழ்வு
பூத்திட வேண்டிக் கொள்வார்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home