Tuesday, December 23, 2008

அஞ்சாமல் வலம்வரும் தலைவர்களும் !
அஞ்சியஞ்சி வாழும் பொதுமக்களும் !

குண்டு துளைக்காத கார்களில் சென்றிடுவார்!
கொஞ்சமும் நாட்டிலே அச்சுறுத்தல் இல்லையென்பார்!
அஞ்சவேண்டாம் மக்கள்என்றே சொல்லிடுவார் புன்னகைத்து!
அஞ்சாமல் ஆபத்தில் வாழ்!

அப்பாவி மக்கள் அடிபட்டுச் சாய்ந்திடுவார்!
அப்பொழுதும் குண்டு துளைக்காத வண்டிகளில்
தப்பாமல் வந்திடுவார்!ஆறுதலைத் தந்திடுவார்!
எப்பொழுது மக்களுக்கு காப்பு?

குண்டு துளைக்காத மேடை! பளபளக்கும்
குண்டு துளைக்காத கார்கள்! தலைவர்கள்
அஞ்சாமல் வீரமாகப் பேசியே வாழ்கின்றார்!
அஞ்சிவழ்வோர் மக்கள்தான்!பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home