Friday, April 24, 2009

வெண்பாவும் வெங்காயமும்

வெண்பா எழுதுகின்ற நேரத்தில் வெங்காயம்
கொஞ்சம் கடையிலே வாங்கிவா என்றேதான்
சொன்னாள் மனைவிதான்! வெண்பாவைத் தள்ளிவைத்து
வெங்காயம் வாங்கிவந்தேன் இன்று.

உறிக்க உறிக்க விழிகளில் கண்ணீர்
தெறித்தே எரிச்சலுடன் ஓடும் -- கறியுடன்
சாம்பாரில் சேர்த்தால் சுவைமணக்கும்! நாமணக்க
வேண்டுமென்றே நாடும் மனம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home