Saturday, June 12, 2010

பெரும்புள்ளி கரும்புள்ளி

=============================
கள்ள மனங்கொண்டு கள்ளப் பணம்சேர்ப்பார்
அள்ளி வழங்குகின்ற வள்ளலாய் நாள்தோறும்
நல்லபெயர் வாங்கி பெரும்புள்ளி யாகத்தான்
துள்ளி வலம்வருவார்! சொல்.

பெரும்புள்ளி என்றே பெயரெடுத்த போதும்
கரும்புள்ளி என்றே சமுதாயம் தூற்றும்!
இருக்கும் வரையில் தனிமனிதப் பண்பில்
சரியாமல் வாழவேண்டும் சாற்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home