Thursday, January 20, 2011

இளமையும் முதுமையும்
============================
இளமைப் பருவம் தவறுகளை நம்பும்!
இளமைக்குப் பின்னே முதுமைப் பருவம்
களங்கமற்ற உண்மையைச் சந்தேகக் கண்ணால்
கலக்கமுடன் பார்த்திருக்கும் காண்.

நோய்களைத் தவிர்த்தல் அரிது
=========================================
இந்தப் பிறவியில் நம்முடைய தேகத்தை
எந்தெந்த நோய்களெல்லாம் எப்படித் தாக்கவேண்டும்
என்னும் நியதியை மாற்றவும் கூடுமோ?
என்றும் கடினந்தான் சொல்.

பாசாங்கு!
=======================================
பார்வை தெரிந்தாலும் பாசாங்கு செய்தேதான்
பார்வை தெரியவில்லை என்பதைப்போல் ஊழலின்
நாயகர்கள் யார்யார் எனத்தெரிந்த போதிலும்
நேயமுடன் காப்பதேன்? கூறு.

0 Comments:

Post a Comment

<< Home