Wednesday, January 19, 2011

கொடுத்துவைத்த கோலம்
--------------------------------------------------------------------------
நடமாட்டம் உள்ளவரை நம்மை மதிப்பார்!
நடமாட்டம் ஓய்ந்ததும் நம்மை வெறுப்பார்!
நடமாடும் கோலத்தில் நாமோ இறந்தால்
கொடுத்துவைத்த கோலந்தான் கூறு.

தூற்றாமல் வாழ்!
-------------------------------------------------------------------
இவரா இறந்தார்? இவரைப்போல் இந்த
அவனியில் யாரிருப்பார்? என்றுபோற்ற வேண்டும்!
இவர்தான் இறந்தாரா! நல்லவேளை போனார்
இவரென்றே எண்ணவைத்தல் கேடு.

எல்லாமே நாவால்தான்!
----------------------------------------------------------------------
நல்லதைப் பேசு! அனைவரும் நாடுவார்!
அல்லதைப் பேசு ! இருப்பவரும் ஓடுவார்!
எல்லாமே நரம்பற்ற நாவில் உருவாகும்
சொல்லால்தான்! நாவை அடக்கு.

நோயின் தாக்கம்!
--------------------------------------------------------------------
நோய்களின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்காமல்
சாய்ந்து விழும்நேரம் மேனி சுருண்டுவிடும்!
காய்ந்த சருகாகும்! துள்ளிக் குதித்ததெல்லாம்
ஓய்ந்தே அடங்கும் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home