Sunday, January 30, 2011

இந்தியத் தாயின் ஏக்கம்!
====================================
என்வீட்டுக் கூட்டுக்குள் அய்யோ! விரிசல்கள்!
என்னபாவம் நான்செய்தேன்? என்நாடே!சொல்வாயா?
கண்முன்னே ஒற்றுமையைக் காண்பேனா?மாட்டேனா?
புண்பட்டு வாடுகின்றேன் பார்.
==========================================================
சோலையும் பாலையும்!
=============================================
கிட்டப் பழகி பகைப்பதை விட்டுவிட்டு
எட்டப் பழகி உறவை வளர்த்திடுவோம்!
ஒற்றுமை வாழ்க்கையைச் சோலையாக்கும்!வேற்றுமை
வெட்டவெளிப் பாலையாக்கும் பார்.
-============================================================

0 Comments:

Post a Comment

<< Home