Tuesday, March 08, 2011

பொறாமைத் தீ !
======================
அடுத்தவரைப் பார்த்துப் பொறாமையைத் தேக்கித்
தடுமாறும் வாழ்க்கை தறிகெட்டுப் போகும்!
மடுவை மலையாக்கும்! தீயாக மாறி
படுத்தி அலறவைக்கும் பார்.
-----------------------------------------------------------------------------------------
சூழ்நிலை வெள்ளம்!
==========================
பட்டதும் போதும்! படுவதும் போதுமே!
தொட்டனைத் தூறும் மணற்கேணி போலவே
எக்கணமும் சூழ்நிலை வெள்ளப் பெருக்கானால்
நற்றமிழே! என்செய்வேன்? நான்.
-------------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home