Sunday, February 27, 2011

சொந்தச் சிறகுகளுக்குள் குழந்தைகள்

===============================================
அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போகின்ற
பண்பாட்டின் கோலத்தில் வாழ்கின்ற காலகட்டம்!
எந்தநேரம் பெற்றோர் வருவார்கள் என்றேதான்
எண்ணத்தில் ஏக்கத்தைத் தேக்குகின்றார் பிள்ளைகள்!
வந்ததும் ஓடுகின்றார் பார்.

உள்நாட்டில் அம்மா ! வெளிநாட்டில் அப்பாதான்!
தள்ளுகின்றார் நாள்களைத்தான்!ஆண்டுக் கொருமுறை
பிள்ளைகள் அப்பாவைப் பார்க்கின்றார்!உள்ளத்தைச்
சொல்ல முடியவில்லை யே!

சொந்தநாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்க்கையைச்
சொந்தமாக்கும் சூழல்! குழந்தை வளர்ப்பிற்கு
இங்கிருந்து தாத்தாவோ பாட்டியோ செல்லவேண்டும்!
இங்காறு மாதங்கள்! அங்காறு மாதங்கள்!
திண்டாடும் வாழ்க்கை முறை.

காப்பகத்தில் சேர்க்கின்ற சூழ்நிலை வந்துவிட்டால்
ஏக்கமுடன் தான்வளரும் பிள்ளைகள்!பெற்றோரும்
ஆற்றாமைக் கோலத்தில் அன்றாடம் அல்லாடும்
தோற்றத்தில் வாழ்வார் துடித்து.

பாட்டியும் தாத்தாவும் உள்ள குடும்பத்தில்
காப்பகத் தேவை இருக்காது! பிள்ளைகள்
ஏக்கமின்றி நாள்தோறும் சொந்தச் சிறகுக்குள்
வாட்டமின்றி வாழ்கின்றார் இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home