Thursday, April 14, 2011

கண்டிப்பின் பயன் நன்மையே !

================================
பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்றே குழந்தைகள்
துள்ளி அழுவதும் பெற்றோர் அவர்களை
அள்ளித் துடிதுடிக்க நாளும் அனுப்புவதும்
பள்ளியின் காட்சிதன் பார்.

அழுதால் அனுப்பமாட்டார் என்ற எண்ணம்
விழுந்துவிட்டால் நாளும் அழுதிடுவார் இங்கு!
அழஅழ பள்ளிக்(கு) அனுப்புவது நாளும்
குழந்தை உயர்வதற்கே! சொல்.

இப்படிச் செய்தாலும் பள்ளிக்கு நாமிங்கே
எப்படியும் சென்றாக வேண்டுமென்ற எண்ணத்தை
அப்படியே பிள்ளைகள் உள்வாங்கும் பக்குவத்தில்
கற்பதற்கு நாடுவார் காண்.

பள்ளிக்குள் சென்றதும் ஆசானைப் பார்த்ததும்
பள்ளியில் மாணவர்கள் கூட்டத்தைப் பார்த்ததும்
துள்ளியழும் பிள்ளைகள் சட்டென்றே மாறிடுவார்!
பள்ளிதான் பிள்ளைக்குக் காப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home