Thursday, March 10, 2011

கலப்புத் திருமணம்

==========================
தலைமுறைச் சிந்தனையின் போக்கால் இங்கே
கலப்புத் திருமணத்தை ஏற்கின்ற கோலம்
அரங்கேறும் காலகட்டம்! மாற்றங்கள் எல்லாம்
மலைத்திட வைக்கிறது பார்.

முற்போக்கா? பிற்போக்கா? ஒன்றும் தெரியாது!
இப்போக்கோ அப்போக்கோ எப்போக்கில் சென்றாலும்
அக்கப்போர் இல்லாமல் வாழ்தல் அறிவுடைமை!
ஒற்றுமையை வேரூன்றச் செய்.

ஒவ்வொரு சாதிக்கும் வாழ்க்கை முறையுண்டு!
ஒவ்வாமை தன்னைப் புறக்கணித்து வாழவேண்டும்!
எல்லா முறைகளையும் ஏற்கின்ற பக்குவந்தான்
தொல்லையின்றி வாழவைக்கும் சொல்.

கலப்புத் திருமணத்தில் எப்படியோ வாழ்ந்த
இரண்டு குடும்பத் துருவங்கள் சேரும்!
உளமாற விட்டுக் கொடுப்பதே மேன்மை!
களமமைத்தல் கீழ்மை! உணர்.

வாழையடி வாழை மரபுகள் மாறிவிடும்!
வாழ்வின் புரிதல் உணர்வுகளும் மாறிவிடும்!
வாழ்க்கை அமையும் முறைக்கே உடன்பட்டு
வாழ்வதற்குக் கற்றுக்கொள் இங்கு.

1 Comments:

Blogger மதுரை சரவணன் said...

super...vaalththukkal

8:35 AM

 

Post a Comment

<< Home