Thursday, April 07, 2011

பகையைப் பொசுக்கு!

======================
வீட்டுக்குள் வந்தோர் பகைவரே என்றாலும்
காட்டும் வரவேற்பில் உட்பகை மாறிவிடும்!
மாற்றம் உருவாக மார்க்கம் அதுதானே!
தேக்கும் பகையைப் பொசுக்கு.

பகைமனப் போக்குகளைப் பந்தாட விட்டால்
நகைக்கவைத்துப் பார்த்திருக்கும்! நம்மனமே நம்மை
இகழும்!! இடித்துரைக்கும்! தூற்றும் துளைத்து!
அகத்தில் இருள்சூழும் பார்.

நீறுபூத்து நிற்கும் நெருப்பாக இல்லாமல்
நீரால் அணைந்துபோன தீயாக ஆகிவிட்டால்
சீராட்டும் நிம்மதி வாசலுக்குத் தேடிவரும்!
போராட்டம் நின்றுவிடும் சொல்..

0 Comments:

Post a Comment

<< Home