Sunday, April 10, 2011

மக்களாட்சியா?

===============
நகரங்கள் எல்லாம் வளர்ச்சியை நாளும்
மகத்தாகக் கண்டேதான் முன்னேற்றம் காணும்!
அகங்குளிரும் வாழ்க்கை! அடிப்படைத் தேவை
வகைவகையாய் உண்டிங்கே பார்.

உயிர்நாடி யான கிராமத்தைப் பார்த்தால்
உயிரோட்டம் இல்லாத கோலந்தான் உண்டு!
சலிக்காமல் என்றும் உழைக்கின்ற மக்கள்
நலிந்தேதான் வாழ்கின்றார் ஏன்?

வளங்கள் எல்லாம் நகரிலும், வாட்டித்
தளரவைக்கும் ஏழ்மை கிராமத் திலுமே
வலம்வரும் என்றால் மக்களாட்சி என்ற
பெயரெதற்கு? சிந்திப்போம் இன்று.

வாழ்வின் அடிப்படைத் தேவை கிராமத்தில்
வாழ்கின்ற மக்களுக்கு நளும் கிடைப்பதற்குச்
சூளுரைத்தே அட்சி அமைக்கின்ற கட்சிக்கே
தேர்தலில் வக்களிப்போம் வா.

0 Comments:

Post a Comment

<< Home