Monday, August 01, 2011

இத்தகைய கருவி வந்துவிட்டால்?

உள்ளத்தில் ஊசலாடும் எண்ணத்தைக் கண்டறிந்து
துல்லியமாய்க் காட்டும் கருவி உருவானால்
இவ்வுலக வழ்வில் நடிப்போர் முகத்திரையைக்
கவ்விக் கிழித்துவிடும் காண்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரின்
கள்ள மனந்தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும்!
நல்லவர்யார்? கெட்டவர்யார்? என்றே தெரிந்துவிடும்!
இல்லமெல்லாம் போராட்டந் தான்.

உட்பகை மட்டும் வெளியே தெரிந்துவிட்டால்
கட்சிகளின் வன்முறை நாணித் தலைகுனியும்!
எப்பொழுதும் சண்டையும் சச்சரவும் கூட்டணி
கட்டிச் சலசலக்கும் வீடு.

0 Comments:

Post a Comment

<< Home