Monday, August 15, 2011

அன்னா ஹசாரே கைது!

======================
அறவழியை இங்கே முளையிலேயே கிள்ளிக்
கசக்குகின்ற போக்கைக் கடைப்பிடிப்பார் இங்கே!
அசராமல் குண்டுவைக்கும் வன்முறையைப் போக்க
அசடு வழிகின்றார் பார்.

வன்முறை வாதிகளைக் கூப்பிட்டுப் பேசுவார்!
வன்முறை வாதிகளின் கோரிக்கை ஏற்றிடுவார்!
வன்முறை வாதிக்குக் காட்டுகின்ற ஈவிரக்கம்
அன்னாமேல் இல்லையே ஏன்?

கோயபட்சே,ராஜபட்சே, வந்துபோவார் நாட்டில்தான்!
தூயமன அன்னாவைக் கைதுசெய்வார் வீட்டில்தான்!
ஊழல் கறையாலே இந்தியத்தாய் நாணுகின்றாள்1
ஊழல் ஒழிவதுதான் என்று?

நாட்டுக்கு நாடிங்கே மக்கள் கொதித்தெழுந்து
காட்டுகின்ற ஆவேசக் காரணங்கள் இங்கேயும்
ஊற்றெடுத்து நிற்கிறது!ஆனால் வெடிக்காமல்
காப்பதற்கு யார்தான் பொறுப்பு?

0 Comments:

Post a Comment

<< Home