Sunday, December 21, 2014

காகத்தின் ஆசை!
----------------------
நான்வந்து நாற்காலி மீதமரும் நேரத்தில்
வான்பறவைக் காகமொன்று சாளரம்மேல் வந்தமரும்!
தேன்குரலில் காகம் கரைந்தே எனையழைக்கும்!
நானும் உணவெடுப்பேன் சென்று.

கரத்தால் கொடுப்பேன் பிடித்தால் எடுக்கும்!
ஒருசில நேரமோ துப்பும்! சுவர்மேல்
அருகிலே வைத்தால் எடுக்க மறுக்கும்!
விரும்பிடும் நான்ஊட்டத் தான்.

0 Comments:

Post a Comment

<< Home